வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் திடீரென ஆய்வு மேற்கொண்டார் அப்போது மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை பார்த்து மாவட்ட ஆட்சியர் கண்கலங்கினார் மக்கள் இந்த கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு இன்னும் சரியாக புரிதல் இல்லை இதனால்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர் பின்னர் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார் வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் சுகாதார சீர்கேட்டால் உள்ள பகுதியை தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணியமர்த்தி அப்பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார் அது மட்டுமல்லாமல் அங்கு குடிசைகள் அமைத்து காய்கறி விற்பனை செய்து வரும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பித்தார்.